Saturday, November 22, 2014

Real Hero

Puradsifm
சினிமா நடிகர்களை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த சிறுவனைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்....
சக நண்பர்களுடன் வேனில் பள்ளிக்கு போய்க்கொண்டு இருந்தபோது, வேன் திடீரென தீபிடித்தது. டிரைவர் வேனில் இருக்கும் பள்ளி சிறுவர்களைப் பற்றி கவலைப்படாமல் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடிவிட்டார், ஆனால் ஓம் பிரகாஷ் பயத்தில் அரற்றிய நண்பர்களை காப்பாற்ற கதவை உடைத்து ஒவ்வொரு மாணவனாக காப்பாற்ற துவங்கினான்.
கடைசி நேர முயற்சியின் போது கார் கதவின் ரப்பரில் இருந்த தீ ஓம்பிரகாஷின் கன்னத்திலும், முதுகிலும் பட்டு பயங்கரமாக எரிந்தது, ஆனால் அந்த வலியையும், வேதனையையும் விட தன் நண்பர்கள் உயிரே பெரிதென நினைத்த ஓம்பிரகாஷ் நண்பர்களை காப்பாற்றி வெளியே வரவும், வேன் முழுமையாக எரிந்து நாசமானது.
தனக்கு தீக்காயம் ஏற்பட்டவுடன் பயந்து போய் பாதியிலேயே தனது முயற்சியை கைவிட்டு இருந்தாலோ நிச்சயம் ஒன்றிரண்டு மாணவர்களை தீக்கு பலி கொடுக்கவேண்டி இருந்திருக்கும். கேஸ் சிலிண்டர் ஓடும் வேன் என்பதால் எந்த நேரமும் வெடித்து சிதறும் அபாயமும் இருந்தது.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிறு காயங்களுடன் தனது நண்பர்களை காப்பாற்றி விட்ட பெருமிதத்துடன் நின்ற ஓம்பிரகாஷ்க்கு அப்போதுதான் முகத்தில் ஏற்பட்ட தீவிபத்தின் கொடூரம் புரிய ஆரம்பித்தது. இதற்குள் அக்கம், பக்கத்தில் இருந்து திரண்டு விட்ட மக்கள் அவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். நீண்ட சிகிச்சைக்கு பிறகு ஓம் பிரகாஷ் உயிருக்கு ஆபத்தின்றி பிழைத்துக்கொண்டாலும், நடந்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட வடு அழிக்கமுடியாத அளவிற்கு அவனது முகத்தை சிதைத்து இருந்தது.
ஆனால் அதைப்பற்றி கவலைப்படவில்லை தன்னால் உயிர் பிழைத்த நண்பர்களும், அவரது பெற்றோர்களும், உறவினர்களும் மற்றுமுள்ள பள்ளி நண்பர்களும், ஆசிரியர்களும் பூங்கொத்துடன் தன்னை சந்தித்து வாழ்த்து கூறியதையும், கண்ணீருடன் நன்றியை பகிர்ந்து கொண்டதையுமே பெருமையாக நினைத்தான்.
இவனைப் பெற்றவர்கள் பெருமையாக நினைத்தார்கள், இதையும் தாண்டி சிறுவர்களுக்காக வழங்கப்படும் நாட்டின் வீரதீர சாகச செயலுக்கான (நேஷனல் பிரேவரி அவார்டு) விருதினை ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார்.
நல்லதொரு சிறுவனை அறிமுகப்படுத்திய மனநிறைவோடு பகிர்கிறோம்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மத்தவங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் சொல்லனும்

dinakaran daily newspaper
ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்தாங்க.
பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க. அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான். அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.
குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.
'என்னப்பா பண்ண லாம்?'னு கேட்டார்.
'அய்யா! நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்'னான்.
பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு 'சபாஷ்' போட்டுட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு. பிரசங்கம் முடிஞ்சுது. 'எப்படிப்பா இருந்தது என் பேச்சு?'னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.
'அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!'னான். அவ்ளோதான்... குரு தெறிச்சிட்டார்!
நீதி...மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும்...புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் !!!

Friday, November 14, 2014

கேது பகவான்


   
http://suyamvarammatrimony.com/nava_images2/kethu_bhagavan.png
நவகிரகங்களில் ஒன்பதாமவரான கேதுவிற்கு கதிரப்பகை , சிகி,செம்பாம்பு என்ற பிற பெயர்களும் உள்ளன.
கேது பகவான் ட்டித்தொழில், அயல் நாட்டில் பிழைப்பு, கடின உழைப்பு,வைத்தியம், கெட்ட சினேகம், இந்திரிய நாட்டம், மயக்கம்,குன்மம், குட்டம், சயம், வலி ,சுரம், தோல் வியாதி, விஷக்கடி , மாந்திரிகை வித்தை, கைது ஆகும் ஆணை, ஆணை ரத்துஆதல் , சாதிவிட்டு நீக்குதல், ஞானம்,மோட்சம், ஆகியவைகளுக்கு காரகனாய் உள்ளனர். கேதுவின் அருள் பெற விநாயகரை வழிபட வேண்டும்

   http://www.thenkalahasti.com/images/ketu.jpg நவரத்தினங்களில் வைடூரியம் இவருக்குரியது. கேதுவின் மனைவி பெயர் சித்ரலேகா. இராசி மண்டலத்தில் இவர் அப்பிரதட்சணமாக சுற்றுவர்.
கேதுவிற்கு கரும்புச் சாறால் அபிஷேகம் செய்வித்து, செவ்வாடை , வை
டூரியம், செந்தாமரை,செவ்வரளி,வெட்டிவேர் ஆகியவற்றால் அலங்காரம் செய்து கேதுமந்திரங்களை ஓதி, தர்ப்பைபுல்லால் யாகத்தீயைஎழுப்பி ,கொள்ளு , கொள்ளுப்பருப்புப்பொடி அன்னம் ஆகியவற்றால் ஆகுதி செய்து , அர்ச்சனைசெய்து, புளியஞ்சாதம் நைவேத்தியம் படைத்து,தூப, தீபம் காட்டி பிராத்தனை செய்தால் கேது தோஷம் நீங்கும்.
கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றிப் பாபம் தீர்ப்பாய் வாதம், வம்பு, வழக்கு களின்றி கேதுத் தேவே கேண்மையாய் ரஷி

Make Money at : http://bit.ly/adflywin

கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றிப் பாபம் தீர்ப்பாய் வாதம், வம்பு, வழக்கு களின்றி கேதுத் தேவே கேண்மையாய் ரஷி

Make Money at : http://bit.ly/adflywin
 கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றி!! பாபம் தீர்ப்பாய் வாதம், வம்பு, வழக்கு களின்றி கேதுத் தேவே கேண்மையாய் ரஷி !!

Make Money at : http://bit.ly/adflyw

Monday, October 27, 2014

வறுமை நீக்கி,வளமை சேர்க்கும் நாகநாதன் கோயில் மற்றும் கேது

கிபி பத்தாம் நுற்றாண்ட்டிற்க்கு பின் பிற்கால சோழர்களின் ஆட்சியின் போது காவிரிப் பூம்பட்டினம் பகுதியில் பலகோவில்கள் கட்டப் பட்டுள்ளன. அவைகளுள் ஒன்றுதான் நாகநாதசுவாமி திருக்கோயில். இக்கோயில் பூம்புகாரின் வணிகர் வாழ்ந்த பகுதியான வாணகிரிக்கு மேற்கே உள்ள கீழ்ப்பெரும் பள்ளத்தில் உள்ளது . கேதுவை வழிபட இக்கோயிலுக்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.
தேவரும் அசுரரும் பாற்க்கடலைக் கடைய மந்திர மலையை மத்தாகவும், வாசுகி எனும் பாம்பை கயிறாகவும் பயன்படுத்தினர்.வலிபொறுக்காத் வாசுகி நஞ்சைக்கக்கியது. நஞ்சினைக் கண்டு அஞ்சிய தேவரும், அசுரரும் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமானும் ந்நஞ்சினை எடுத்து உண்டார். பார்வதி ந்நஞ்சு உள்ளே செல்லாதவாறு தடுக்க , ந்நஞ்சு சிவபெருமானின் கண்டத்தில் தங்கியது. அவர் நீலகண்டர் எனும் பெயர் பெற்றார். அமுதம் கிடைக்காத கோபத்தில் அசுரர்கள் வாசுகியை வைக்கோர்பழுதைப் போல சுருட்டி எரிந்தனர். அது கடற்கறையினிடத்தில் இருந்த ஒரு மூங்கிற்காட்டில் வந்து விழுந்தது . உடல் நைந்து உயிர் போகும் நிலையில் இருந்த அப்பாம்பின் வாலில் இருந்த உயிர் தலைக்கேற அது பிழைத்துக் கொண்டது. சிவபெருமான் தன் நஞ்சினை உண்ணும்படி ஆயிற்றே என உளம் நைந்த வாசுகி அவரிடம் மன்னிப்புப் பெற வேண்டி தவமிருந்தது. சிவபெருமான் அதன் தவத்திற்கு இரங்கி காட்சி தந்தார். வாசுகி தன் பாவத்தைப்பொருத்தருள வேண்டியதோடு , தான் தவம் செய்த மூங்கிற்காட்டில் கோயில் கொண்டு , அங்கு வந்து வழிபடுவோரின் கேது கிரகத் தொல்லைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமென வேண்டிக் கொண்டது. அவ்வாறே சிவபெருமான் நாகநாதசுவாமி என்னும் பெயர் தாஙகி, சௌந்தரநாயகி அம்மையுடன் எழுந்தருளி அருள்பாளித்து வருகின்றார்.

கோயில் இருக்கும் இடம் நாகநாதன் கோயில் எனவும் வாசுகி தவம் செய்த இடம்
மூங்கில் தோப்பு எனவும் வழங்கி வருகிறது. தல விருட்சம் மூங்கில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக கோயில் அமைந்துள்ளது. கோயிலின் எதிரே நாகதீர்த்தம் எனும் திருக்குளம்  உள்ளது. அதன் மேற்கரையில் சந்நிதிக்கு எதிரே அரசும், வேம்பும் உள்ளன.

நுழைவாயிலின் உள்ளே நுழைந்து பிரகாரத்தில் வலமாக வந்தால் மேற்குப் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் , துர்க்கை,லட்சுமிநாராயணர், மகேஸ்வரி, கஜலட்சுமி ஆகிய தெய்வத் திருவுருவங்களை தரிசிக்கலாம். 

வடக்குப் பிரகாரத்தில் சண்டேஸ்வர்ர் சந்நிதியும் , துர்க்கை சந்நிதியும் உள்ளன. இங்கு கிணறும், மூங்கிலும் உள்ளன. கிழக்குப் பிரகாரத்தில் சனீஸ்வர்ர், பைரவர், சம்பந்தர் , நாகர், சூரியன் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.

நாகர் சன்னதிக்கு எதிரே உள்ள நந்தியையும் , பலிபீடத்தையும் வணங்கி மகா மண்டபத்தினுள் சென்றால் அதைஒட்டி அமைந்துள்ள கருவறை வாயிலில் சித்தி விநாயகர் கருவறையில் நாகநாதர் லிங்க வடிவில் எழுந்தருளி உள்ளனர்


அவரை வணங்கி அவரது அருளை யாசித்துத் திரும்பி மகா மண்டபத்துக்கு வரும்போது மேற்கு நோக்கியுள்ள சந்நிதியில் சௌந்தர நாயகியை தரிசிக்கலாம். ஆலயத்தின் கிழக்குப் பிரகாரத்தில் மேற்குநோக்கி நின்ற நிலையில் கேது பகவான் எழுந்தருளி உள்ளார்.  உடல் தெய்வ வடிவிலும் தலை ஐந்து தலை நாக வடிவிலும், கேது பகவான் காட்சித் தருகிறார். இரு கைகளும் வணங்கிய நிலையில் உள்ளன.

கேது பிறப்பினால் அசுரன். அவனுடைய இளமைப் பெயர் ஸ்வர்பானு. அவனுடைய தந்தை விப்சித்து, தாய் சிம்கிகை.

தேவரும், அசுரரும் பாற்கடலைக் கடைந்து  அமிர்த்த்தை எடுத்தனர். மோகினி உருவில் வந்த திருமால் அமிர்த்த்தை அதவர்களுக்குப் பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது தானும் உண்ண விரும்பிய ஸ்வர்னபானு தேவ வடிவெடுத்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் சென்றமர்ந்து அமிர்த்த்தை வாங்கி உண்டார்.

இதனைச் சூரியனும் மோகினிக்குச் சொன்னார்கள். மோகினி கையில் வைத்திருந்த கரண்டியால் அசுரனின் தலையில் ஓங்கி அடித்தார். அசுரனின் தலை வேறாகவும் உடல் வேறாகவும் ஆயிற்று.

தலை, பாம்பு உடலைக் கொண்ட கருநிற ராகுவாகவும், உடல் ஐந்து நாகத் தலைகளுடன் கூடிய சென்னிறமுடைய கேதுவாகவும் ஆயிற்று . பின்னர் ராகுவும், கேதுவும் தவம் செய்து கிரகப் பதவி பெற்றார். அதற்கு முன்பு இருந்த ஏழு கிரகங்களுடன் இவர்களையும் சேர்த்து நவகிரகங்களாக மக்கள் வழிபடலாயினர்.

கேதுவின் நிறம் சிவப் பென்பதொல், இவரைச் சென்னிற மலர்களாலும், சென்னிற ஆடைகளைலுங்ம அலங்கரிப்பர். இவருக்குரிய தானியம் கொள்ளு, சமித்து தர்ப்பை, சுவை புளிப்பு, ஆசனம் கொடி உடையது. கேதுவின் வழிபாட்டால் ஸ்வர்ண லாபத்தை அடையலாம் என்பது அனுபவக்கூற்று.

கேது கிரகத் தொடர்பான தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ள மக்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.


திருத் தலக் குறிப்புகள்
தலத்தின் பெயர் : நாகநாதன் கோயில்
சுவாமியின்
திருநாமம் :  ஸ்ரீ நாகநாதசுவாமி, கேது
எங்கே உள்ளது? தமிழ்நாட்டில், கீழ்ப்பெரும்பள்ளத்தில்
எப்படிச் செல்வது? சென்னையிலிருந்தும் கோவையிலிருந்தும் மாயவரத்துக்கு ரயில்,
பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம்.
மாயவரத்தில் இருந்து பேருந்து, கார் மற்றும் ஆட்டோ மூலம்கீழ்ப்பெரும் பள்ளம் சென்றடையலாம்.
எங்கே தங்குவது :
மாயவரத்தில் தங்கும் விடுதிகளும் உணவுவிடுதிகளும் உள்ளன.
தரிசன நேரம்
காலை 6.00 முதல் பகல் 12.30 வரை
மாலை 4.00 முதல் இரவு 8.30 மணி வரை
கோயில் முகவரி,
 நிர்வாக அதிகாரி,
கேது ஸ்தலம், நாகநாதசுவாமி திருக்கோயில்,
வாணகிரி-
609 105, நாகை மாவட்டம்
.

Wednesday, October 15, 2014

ராகு







மனிதத் தலை  நாக உடருடன் இருக்கும் ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச் சிறப்பும் சுவை நிறம்பியது.  விப்ரசித்தி என்ற மன்ன்ன் ஒருவனுக்கும்சிம்மிகை என்ற அசுரகுலப் பென்னொருத்திக்கும் மகனாகப் பிறந்தவர் ராகு. தேவர்களும், அசுர்ர்களும்பாற்கடலைக் கடையும் போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப்  பெற்று உண்டுவிட்டான்.
உண்மை அறிந்த மகாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலைவேறு உடல்வேறாகி விழுந்தான். ஆயினும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப் பகுதியில் உயிர் இருந்த்து . ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்ட , இறைவன் பாம்பின் உடலை அவருக்குக் கொடுத்து அவரை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.
ராகு பகவானுக்கு வெள்ளிக் கிழமையில் அபிஷேகம் செய்வித்து, நீல வஸ்திரம் ,கோமேதக மணி, நீலமந்தாரை ஆகியவற்றால் அலங்காரம் செய்து ராகு மந்திரங்களை ஓதி , அருகம்புல்லால் யாகத் தீயை எழுப்பி, உளுந்து தானியம், உளுத்தம்பருப்புப் பொடி அன்னம் ஆகியவற்றால் ஆகுதி செய்து , அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து பிராத்தனை செய்தால் ராகுகிரக தோஷம் நீங்கும்.
அரவெனும் ராகு அய்யனே போற்றி !
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி !
ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி !
ராகுக்கனியே ரம்மியா போற்றி  !