Thursday, December 17, 2015

பகவத்கீதை

திருதராஷ்டிரர் கூறினார்,
சஞ்ஜயனே, போர்புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?
           பகவத்கீதை 1:1

Tuesday, December 15, 2015

அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள் பற்றிப் பார்ப்போம்

சிவமயம் சிவாயநம
1. ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.
2. ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திற்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், துரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.
3. ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .
4. ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.
ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.
5. நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.
6. உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.
7. கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
8. காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோபத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.
9. பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி ( கெட்டவிசயம்) தெரியாது, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.
10. சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
11. சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
12. கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
13. விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்துக்  கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
14. இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று  கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
15. கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
16. அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.
ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
17. யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.
18. எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
19. அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.
20. சிங்கத்தின்  குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,
21. வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.
22. அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.
கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.
23. எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீனான மனிதன் ஆவான்.
24. மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.
பாம்பு, அரசன் , புலி, கொட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .
25. பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.
கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.
26. கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.
27. வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.
28. பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.
29. வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்தூய்மை வராது.
30. கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோபம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.
உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உண்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கிச்  செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களையும் தர்மங்களையும்  செய்யுங்கள்
திருச்சிற்றம்பலம்

Friday, October 30, 2015

சிட்டுக்குருவி

Puradsifm
செல்போன் டவர் வந்ததானால் அழிந்தது என்று நினைக்கிறோம்!!! ஆனால்
உண்மை அது அல்ல
பொதுவாக சிட்டுக்குருவி கூடு கட்டத்தெரியாது அதன் இருப்பிடம் என்பது பழைய நாட்டு ஒடு கட்டிய வீடு மற்றும் கூறை விட்டில் உள்ள தாழ்வரத்தில் தான் தங்கும்
இப்போது கிராமத்தில் கூட அந்த மாதிரியான வீடுகள் இல்லை
இது தான் நிதர்சனமான உண்மை...
எங்கு காணினும் காங்கிரிட் வீடுதான் அதுவும் உட்காருவதற்கு திண்னைகள் கூட கிடையாது அதில் எங்கே இருக்கிறது தாழ்வாரம் அப்புறம் எப்படி சிட்டுக்குருவி வரும்
நானும் எனது நண்பர் செந்திலும் மருந்து கடை மற்றும் மளிகை கடையில் இருக்கும் Horlicks மற்றும் சோப் வகையாறாவின் அட்டைப் பெட்டி 50 வாங்கினோம்
அதை சதுரமாக வைத்து ஒரு கை போகிற அளவுக்கு ஒட்டை வைத்து அதில் சிறிது வைக்கோல் வைத்து
எங்கள் தெருவாசிகளுக்கு தலா 2 வீதம் 20 வீட்டுக்கு கொடுத்து போர்ட்டிகோ மற்றும் தாழ்வாரத்தில்
கட்டி தொங்க விட்டோம்
என்ன ஆச்சரியம் 20 வீட்டில்
18 வீட்டுக்கு சிட்டுக் குருவி அந்த கூண்டில் ஜோடியா வந்துவிட்டது
இதை அதிகம் பகிறுங்கள்
நீங்களும் உங்கள் வீட்டின் முன்பு ஒரு அட்டைப் பெட்டி தாயார் செய்து வையுங்கள்
உங்கள் வீட்டுக்கும் சிட்டுக்குருவி வரும்
உலகம் எல்லா உயிருக்கும் பொதுவானது..
ஓட்டுவீடு இல்லாதது ஒருகாரணம்
மற்றொன்று சிறுதானிய ( கம்பு, ராகி சோழம், சாமை, தினை, குதிரைவாலி) விவசாயத்தை மறந்துவிட்டு பணப்பயிறுகளான வாழை, தென்னை, கரும்பு போன்ற பயிர்களை விவசாயம் செய்ததுதும் ஒரு காரணம் !
அவை வாழும் பகுதியில் தானியங்களை சிதறி வையுங்கள்
அவைகளுக்கு சிதறியவையே மிக பிடிக்கும்
அபுதாபியில் ஏராளமான சிட்டுகுருவிகள் உள்ளன

Thursday, October 15, 2015

Fwd: அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர்

நன்றி Satheesh T

இந்த உலகிற்க்கு
முதன்முதலில் அறுவை
சிகிச்சையை
அறிமுகப்படுத்தியவர்கள்
> 'இந்துக்கள்'
> அறுவை சிகிச்சையின் தந்தை
> சுஸ்ருதர் (காலம் கி.மு. 600)
> ...
> சுஸ்ருதர், உலகளவில்
> அனைவராலும்
> ஏற்றுக்கொள்ளப்பட்ட
> மருத்துவமாமேதை. இவர்
> ரிஷி விஸ்வாமித்திரருக்குப்
> பிறந்தவர். உலகின் முதல்
> அறுவை சிகிச்சை கலைக்
> களஞ்சியமான "சுஸ்ருத
> சம்ஹிதையை" மனித
> சமுதாயத்திற்க்கு
> வழங்கியவர். மயக்க மருந்து
> அறிவியல் மற்றும்
> பிளாஸ்டிக் சர்ஜரியின்
> தந்தையாகப்
> போற்றப்படுபவர்.
> .
> இவர் தமது சுஸ்ருத
> சம்ஹிதையில், பன்னிரண்டு
> விதமான எலும்பு
> முறிவுக்கும், ஆறு விதமான
> மூட்டு நகர்வகளுக்கும்
> உண்டான மருத்துவ
> முறையை விளக்கிருக்கிறார்.
> 125 விதமான அறுவை
> சிகிச்சை கருவிகளை
> உபயோகப்படுத்தியுள்ளார்.
> இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண
> சிகிச்சைக்கான
> சிறிய கத்திகள், இரட்டை
> விளிம்பு கத்திகள், வடிக்கும்
> ரப்பர் குழாய் மற்றும்
> மலக்குடல் சீரமைப்புக்
> கருவிகள் போன்றவை
> விலங்கு மற்றும்
> பறவைகளின் தாடை
> எளும்புகளில் இருந்து
> வடிவமைக்கப்பட்டவை.
> .
> இவர் மேலும் பல்வேறு
> தையல்
> முறைகளைப்பற்றியும்
> விளக்கியுள்ளார்.
> குதிரையின் முடி,
> மரப்பட்டைகளின் இழை,
> நரம்பு போன்றவற்றை
> நூலாக்க்
> கொண்டு தைத்திருக்கிறார்.
> சுஸ்ருத சம்ஹிதையில், 300
> விதமான அறுவை
> சிகிச்சை முறைகள்
> விளக்கப்பட்டுள்ளன.
> ஆச்சார்யர் சுஸ்ருதர்,
> மருத்துவ
> உலகின், குறிப்பாக அறுவை
> சிகிச்சையின் மாமேதை
> என்று
> போற்றப்படுகிறார்.

குரு கோவிந்த் சிங். ++++++++++++++++++

நன்றி..
> Mohan Raj
>
> மகாபுருஷனான குருகோவிந்த சிங்கனைப் போல, இந்துக்களுக்காக எதையும் தாங்கச் சித்தமாக இருக்கும்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து ஆவீர்கள்.
>
> இந்து தர்மத்தின் பாதுகாப்புக்காக தனது ரத்தத்தைச் சிந்திய பிறகும், தனது குழந்தைகள் போர்க்களத்தில் கொல்லப் படுவதைக் கண்ட பிறகும் - ஆகா! அந்த மகாபுருஷனான குருவின் உதாரணம் தான் என்னே! -
>
> யாருக்காகத் தமது உதிரத்தையும், தமது நெருங்கிய மக்களின், இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட -
>
> அந்தப் படுகாயமுற்ற சிங்கம் - களத்திலிருந்து ஓய்ந்து வெளிவந்தது, தெற்கே வந்து மடிய! நன்றிகெட்டுத் தம்மைக் கை விட்டவர்களைக் குறித்து ஒரு பழிச்சொல்லைக் கூட அவர் தப்பித் தவறியும் வெளியிடவில்லை.. "
>
> (சுவாமி விவேகானந்தர், கொழும்புவிலிருந்து அல்மோரா வரை - இந்துமதத்தின் அடிப்படைகள் - லாகூரில் பேசியது).