சனீஸ்வரன் தாமஸ குணமுள்ளவர். இவருக்கு நீளாதேவி, மந்தாதேவி, சேஷ்டாதேவி என மூன்று மனைவியர். குளிகன் என்றொரு மகன்.
இவர் இரும்பு, எண்ணெய், கருப்பு தானியம், பூமியில் புதைந்த புதையல் முதலியவற்றுக்குக் காரகர். அவரவர் கர்மவினைப்படி வறுமை, கலகம், நோய், அவமதிப்பு ஆகியவற்றை உண்டாக்குகிறவர்.
ஒருவருடைய ஜாதகத்தில் இவர் நல்ல இடத்தில் தங்கி வலுவும் பெற்றிருப்பாரானால் அளவற்ற நலன்களை வாரி வழங்குவார்.
சனீஸ்வரருக்கு சனிக்கிழமைகளில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம், நீலக்கல், கருங்குவளை போன்றவற்றால் அலங்காரம் செய்து, சனீஸ்வர மந்திரங்களை ஓதி,வன்னிச்சமித்தினால் யாகத்தீயை எழுப்பி எள்ளு தானியம், எள்ளுப்பொடி அன்னம் ஆகுதி செய்து, நல்லெண்ணை தீபமேற்றி, அர்ச்சனை செய்து, தூப,தீப நைவேத்தியம் செய்து
ப்ரார்த்தனை செய்தால் சனிகிரக தோஷம் நீங்கும்.
No comments:
Post a Comment