Wednesday, February 26, 2014

வறட்சி நீக்கி வளம் சேர்க்கும் கணபதி அக்ரஹாரம் மஹாகணபதி

                                             
முழு முதற் கடவுளான கணபததிக்குச் சிறப்புகள் பல உண்டு.

திரிபுர சம்ஹார சமயத்தில் அசுரர்களுடன் சிவபெருமான் போரிட்ட போது தேர்ச் சக்கர அச்சு முறிந்தது,

மஹாதேவன் மஹாகணபதியை வேண்ட தடை விலகி போரில் வெற்றி கிட்டியது,

பரமேஸ்வரனை அடையப் பார்வதி கடும்தவம் புரந்தாள்• காட்சி கிட்டவில்லை,சதுர்த்தி நாயகனுக்கு விரதம் இருந்து பூஜை செய்ததும் பரமேஸ்வரன் காட்சி அளித்து ஏற்றுக்கொண்டார்

வள்ளியை வசீகரிக்க வேலன் வேடன்,விருத்தன் என்று பல வேடம் தரித்தும் முருகனுக்குக் காரியம் கைகூடவில்லை•