Saturday, November 22, 2014

Real Hero

Puradsifm
சினிமா நடிகர்களை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த சிறுவனைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்....
சக நண்பர்களுடன் வேனில் பள்ளிக்கு போய்க்கொண்டு இருந்தபோது, வேன் திடீரென தீபிடித்தது. டிரைவர் வேனில் இருக்கும் பள்ளி சிறுவர்களைப் பற்றி கவலைப்படாமல் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடிவிட்டார், ஆனால் ஓம் பிரகாஷ் பயத்தில் அரற்றிய நண்பர்களை காப்பாற்ற கதவை உடைத்து ஒவ்வொரு மாணவனாக காப்பாற்ற துவங்கினான்.
கடைசி நேர முயற்சியின் போது கார் கதவின் ரப்பரில் இருந்த தீ ஓம்பிரகாஷின் கன்னத்திலும், முதுகிலும் பட்டு பயங்கரமாக எரிந்தது, ஆனால் அந்த வலியையும், வேதனையையும் விட தன் நண்பர்கள் உயிரே பெரிதென நினைத்த ஓம்பிரகாஷ் நண்பர்களை காப்பாற்றி வெளியே வரவும், வேன் முழுமையாக எரிந்து நாசமானது.
தனக்கு தீக்காயம் ஏற்பட்டவுடன் பயந்து போய் பாதியிலேயே தனது முயற்சியை கைவிட்டு இருந்தாலோ நிச்சயம் ஒன்றிரண்டு மாணவர்களை தீக்கு பலி கொடுக்கவேண்டி இருந்திருக்கும். கேஸ் சிலிண்டர் ஓடும் வேன் என்பதால் எந்த நேரமும் வெடித்து சிதறும் அபாயமும் இருந்தது.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிறு காயங்களுடன் தனது நண்பர்களை காப்பாற்றி விட்ட பெருமிதத்துடன் நின்ற ஓம்பிரகாஷ்க்கு அப்போதுதான் முகத்தில் ஏற்பட்ட தீவிபத்தின் கொடூரம் புரிய ஆரம்பித்தது. இதற்குள் அக்கம், பக்கத்தில் இருந்து திரண்டு விட்ட மக்கள் அவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். நீண்ட சிகிச்சைக்கு பிறகு ஓம் பிரகாஷ் உயிருக்கு ஆபத்தின்றி பிழைத்துக்கொண்டாலும், நடந்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட வடு அழிக்கமுடியாத அளவிற்கு அவனது முகத்தை சிதைத்து இருந்தது.
ஆனால் அதைப்பற்றி கவலைப்படவில்லை தன்னால் உயிர் பிழைத்த நண்பர்களும், அவரது பெற்றோர்களும், உறவினர்களும் மற்றுமுள்ள பள்ளி நண்பர்களும், ஆசிரியர்களும் பூங்கொத்துடன் தன்னை சந்தித்து வாழ்த்து கூறியதையும், கண்ணீருடன் நன்றியை பகிர்ந்து கொண்டதையுமே பெருமையாக நினைத்தான்.
இவனைப் பெற்றவர்கள் பெருமையாக நினைத்தார்கள், இதையும் தாண்டி சிறுவர்களுக்காக வழங்கப்படும் நாட்டின் வீரதீர சாகச செயலுக்கான (நேஷனல் பிரேவரி அவார்டு) விருதினை ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார்.
நல்லதொரு சிறுவனை அறிமுகப்படுத்திய மனநிறைவோடு பகிர்கிறோம்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மத்தவங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் சொல்லனும்

dinakaran daily newspaper
ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்தாங்க.
பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க. அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான். அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.
குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.
'என்னப்பா பண்ண லாம்?'னு கேட்டார்.
'அய்யா! நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்'னான்.
பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு 'சபாஷ்' போட்டுட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு. பிரசங்கம் முடிஞ்சுது. 'எப்படிப்பா இருந்தது என் பேச்சு?'னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.
'அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!'னான். அவ்ளோதான்... குரு தெறிச்சிட்டார்!
நீதி...மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும்...புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் !!!

Friday, November 14, 2014

கேது பகவான்


   
http://suyamvarammatrimony.com/nava_images2/kethu_bhagavan.png
நவகிரகங்களில் ஒன்பதாமவரான கேதுவிற்கு கதிரப்பகை , சிகி,செம்பாம்பு என்ற பிற பெயர்களும் உள்ளன.
கேது பகவான் ட்டித்தொழில், அயல் நாட்டில் பிழைப்பு, கடின உழைப்பு,வைத்தியம், கெட்ட சினேகம், இந்திரிய நாட்டம், மயக்கம்,குன்மம், குட்டம், சயம், வலி ,சுரம், தோல் வியாதி, விஷக்கடி , மாந்திரிகை வித்தை, கைது ஆகும் ஆணை, ஆணை ரத்துஆதல் , சாதிவிட்டு நீக்குதல், ஞானம்,மோட்சம், ஆகியவைகளுக்கு காரகனாய் உள்ளனர். கேதுவின் அருள் பெற விநாயகரை வழிபட வேண்டும்

   http://www.thenkalahasti.com/images/ketu.jpg நவரத்தினங்களில் வைடூரியம் இவருக்குரியது. கேதுவின் மனைவி பெயர் சித்ரலேகா. இராசி மண்டலத்தில் இவர் அப்பிரதட்சணமாக சுற்றுவர்.
கேதுவிற்கு கரும்புச் சாறால் அபிஷேகம் செய்வித்து, செவ்வாடை , வை
டூரியம், செந்தாமரை,செவ்வரளி,வெட்டிவேர் ஆகியவற்றால் அலங்காரம் செய்து கேதுமந்திரங்களை ஓதி, தர்ப்பைபுல்லால் யாகத்தீயைஎழுப்பி ,கொள்ளு , கொள்ளுப்பருப்புப்பொடி அன்னம் ஆகியவற்றால் ஆகுதி செய்து , அர்ச்சனைசெய்து, புளியஞ்சாதம் நைவேத்தியம் படைத்து,தூப, தீபம் காட்டி பிராத்தனை செய்தால் கேது தோஷம் நீங்கும்.
கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றிப் பாபம் தீர்ப்பாய் வாதம், வம்பு, வழக்கு களின்றி கேதுத் தேவே கேண்மையாய் ரஷி

Make Money at : http://bit.ly/adflywin

கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றிப் பாபம் தீர்ப்பாய் வாதம், வம்பு, வழக்கு களின்றி கேதுத் தேவே கேண்மையாய் ரஷி

Make Money at : http://bit.ly/adflywin
 கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றி!! பாபம் தீர்ப்பாய் வாதம், வம்பு, வழக்கு களின்றி கேதுத் தேவே கேண்மையாய் ரஷி !!

Make Money at : http://bit.ly/adflyw