Saturday, November 19, 2016

திருவாசகம்

யானே பொய்என் நெஞ்சும்
பொய்என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனைவந்து உருமாறே.
பொருள்: தேனே! அமுதமே! கருப்பஞ்சாற்றின் தெளிவே! அடியார்களுக்கு இன்பம் மிகுவிக்கும் பெரியோனே! நான் பொய்யனேன்; என் மனமும் பொய்; நான் செய்யும் அன்பும் பொய்யானது; தீவினை உடையவனாகிய நான் அழுதால் உன்னைப பெறலாம் அல்லவா? சிறியேனாகிய நான் உன்னை வந்து அடையுமாறு அருள் செய்வாயாக!
                   திருவாசகம் 5:9:10