Friday, October 30, 2015

சிட்டுக்குருவி

Puradsifm
செல்போன் டவர் வந்ததானால் அழிந்தது என்று நினைக்கிறோம்!!! ஆனால்
உண்மை அது அல்ல
பொதுவாக சிட்டுக்குருவி கூடு கட்டத்தெரியாது அதன் இருப்பிடம் என்பது பழைய நாட்டு ஒடு கட்டிய வீடு மற்றும் கூறை விட்டில் உள்ள தாழ்வரத்தில் தான் தங்கும்
இப்போது கிராமத்தில் கூட அந்த மாதிரியான வீடுகள் இல்லை
இது தான் நிதர்சனமான உண்மை...
எங்கு காணினும் காங்கிரிட் வீடுதான் அதுவும் உட்காருவதற்கு திண்னைகள் கூட கிடையாது அதில் எங்கே இருக்கிறது தாழ்வாரம் அப்புறம் எப்படி சிட்டுக்குருவி வரும்
நானும் எனது நண்பர் செந்திலும் மருந்து கடை மற்றும் மளிகை கடையில் இருக்கும் Horlicks மற்றும் சோப் வகையாறாவின் அட்டைப் பெட்டி 50 வாங்கினோம்
அதை சதுரமாக வைத்து ஒரு கை போகிற அளவுக்கு ஒட்டை வைத்து அதில் சிறிது வைக்கோல் வைத்து
எங்கள் தெருவாசிகளுக்கு தலா 2 வீதம் 20 வீட்டுக்கு கொடுத்து போர்ட்டிகோ மற்றும் தாழ்வாரத்தில்
கட்டி தொங்க விட்டோம்
என்ன ஆச்சரியம் 20 வீட்டில்
18 வீட்டுக்கு சிட்டுக் குருவி அந்த கூண்டில் ஜோடியா வந்துவிட்டது
இதை அதிகம் பகிறுங்கள்
நீங்களும் உங்கள் வீட்டின் முன்பு ஒரு அட்டைப் பெட்டி தாயார் செய்து வையுங்கள்
உங்கள் வீட்டுக்கும் சிட்டுக்குருவி வரும்
உலகம் எல்லா உயிருக்கும் பொதுவானது..
ஓட்டுவீடு இல்லாதது ஒருகாரணம்
மற்றொன்று சிறுதானிய ( கம்பு, ராகி சோழம், சாமை, தினை, குதிரைவாலி) விவசாயத்தை மறந்துவிட்டு பணப்பயிறுகளான வாழை, தென்னை, கரும்பு போன்ற பயிர்களை விவசாயம் செய்ததுதும் ஒரு காரணம் !
அவை வாழும் பகுதியில் தானியங்களை சிதறி வையுங்கள்
அவைகளுக்கு சிதறியவையே மிக பிடிக்கும்
அபுதாபியில் ஏராளமான சிட்டுகுருவிகள் உள்ளன

Thursday, October 15, 2015

Fwd: அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர்

நன்றி Satheesh T

இந்த உலகிற்க்கு
முதன்முதலில் அறுவை
சிகிச்சையை
அறிமுகப்படுத்தியவர்கள்
> 'இந்துக்கள்'
> அறுவை சிகிச்சையின் தந்தை
> சுஸ்ருதர் (காலம் கி.மு. 600)
> ...
> சுஸ்ருதர், உலகளவில்
> அனைவராலும்
> ஏற்றுக்கொள்ளப்பட்ட
> மருத்துவமாமேதை. இவர்
> ரிஷி விஸ்வாமித்திரருக்குப்
> பிறந்தவர். உலகின் முதல்
> அறுவை சிகிச்சை கலைக்
> களஞ்சியமான "சுஸ்ருத
> சம்ஹிதையை" மனித
> சமுதாயத்திற்க்கு
> வழங்கியவர். மயக்க மருந்து
> அறிவியல் மற்றும்
> பிளாஸ்டிக் சர்ஜரியின்
> தந்தையாகப்
> போற்றப்படுபவர்.
> .
> இவர் தமது சுஸ்ருத
> சம்ஹிதையில், பன்னிரண்டு
> விதமான எலும்பு
> முறிவுக்கும், ஆறு விதமான
> மூட்டு நகர்வகளுக்கும்
> உண்டான மருத்துவ
> முறையை விளக்கிருக்கிறார்.
> 125 விதமான அறுவை
> சிகிச்சை கருவிகளை
> உபயோகப்படுத்தியுள்ளார்.
> இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண
> சிகிச்சைக்கான
> சிறிய கத்திகள், இரட்டை
> விளிம்பு கத்திகள், வடிக்கும்
> ரப்பர் குழாய் மற்றும்
> மலக்குடல் சீரமைப்புக்
> கருவிகள் போன்றவை
> விலங்கு மற்றும்
> பறவைகளின் தாடை
> எளும்புகளில் இருந்து
> வடிவமைக்கப்பட்டவை.
> .
> இவர் மேலும் பல்வேறு
> தையல்
> முறைகளைப்பற்றியும்
> விளக்கியுள்ளார்.
> குதிரையின் முடி,
> மரப்பட்டைகளின் இழை,
> நரம்பு போன்றவற்றை
> நூலாக்க்
> கொண்டு தைத்திருக்கிறார்.
> சுஸ்ருத சம்ஹிதையில், 300
> விதமான அறுவை
> சிகிச்சை முறைகள்
> விளக்கப்பட்டுள்ளன.
> ஆச்சார்யர் சுஸ்ருதர்,
> மருத்துவ
> உலகின், குறிப்பாக அறுவை
> சிகிச்சையின் மாமேதை
> என்று
> போற்றப்படுகிறார்.

குரு கோவிந்த் சிங். ++++++++++++++++++

நன்றி..
> Mohan Raj
>
> மகாபுருஷனான குருகோவிந்த சிங்கனைப் போல, இந்துக்களுக்காக எதையும் தாங்கச் சித்தமாக இருக்கும்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து ஆவீர்கள்.
>
> இந்து தர்மத்தின் பாதுகாப்புக்காக தனது ரத்தத்தைச் சிந்திய பிறகும், தனது குழந்தைகள் போர்க்களத்தில் கொல்லப் படுவதைக் கண்ட பிறகும் - ஆகா! அந்த மகாபுருஷனான குருவின் உதாரணம் தான் என்னே! -
>
> யாருக்காகத் தமது உதிரத்தையும், தமது நெருங்கிய மக்களின், இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட -
>
> அந்தப் படுகாயமுற்ற சிங்கம் - களத்திலிருந்து ஓய்ந்து வெளிவந்தது, தெற்கே வந்து மடிய! நன்றிகெட்டுத் தம்மைக் கை விட்டவர்களைக் குறித்து ஒரு பழிச்சொல்லைக் கூட அவர் தப்பித் தவறியும் வெளியிடவில்லை.. "
>
> (சுவாமி விவேகானந்தர், கொழும்புவிலிருந்து அல்மோரா வரை - இந்துமதத்தின் அடிப்படைகள் - லாகூரில் பேசியது).

முன்னோரை வழிபடும் மகாளய அமாவாசை - 12–10–2015—நமது பித்ருக்கள் நம்மை ஆசிர்வதிக்கும் நன்நாள்...... >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பித்ருக்கு தர்பணம் பற்றி கருடபுரணத்தில்
> >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
> இரவு- பகல் பாராமல், பசியோடும் பாசத்தோடும் தன் வம்சத்தை காண வரும் பித்ருக்கள் அமாவாசைகளில் மிக விசேஷமானது மஹாளய அமாவாசையாகும். அன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜர், அனுமதி தருவார். அதனால் யம காவலர்கள், பித்ருக்களை அழைத்துக்கொண்டு சூரியன் இருக்கும் இடத்திற்கு வருவார்கள். அங்கிருந்து சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு பித்ருக்களை அழைத்து வருவார்கள்.
> பித்ருக்களை அவரவர் இல்லத்திற்கு செல்ல அனுமதிப்பார்கள் யமதர்மராஜாவின் காவலர்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்கள்.
> நம் வம்சத்தினர் நமக்கு உணவு தருவார்களா என்று காத்திருக்கும் பித்ருக்களின் ஆத்மா.
>
> அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு நிச்சயம் தர்பணம் தர வேண்டும். நாம் தரும் பிண்டமும், தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவு. மஹாளய அமாவாசை நேரம் முடிந்த உடனே, யம தேவரின் காவலர்கள் மீண்டும் பித்ருக்களை அழைத்துக்கொண்டு யமலோகம் செல்ல, சூரிய பகவானின் வாகனம் இருக்கும் இடத்திற்கு செல்வார்கள்.
> அதற்காக அவர்கள் அதிக தூரம் நடந்து செல்வார்கள்.
> சூரியனின் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு செல்ல பித்ருக்களும், யமதர்மரின் காவலர்களும் நாள் ஒன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காதவழி தூரம் இரவும் பகலும் நடந்து செல்ல வேண்டும்.
>
> அவர்கள் போகும் பாதையில் கூர்மையான ஈட்டியை போல் இலைகள் கொண்ட காடு இருக்கும். இத்தனை தூரம் அவர்கள் நடக்க இருப்பதால்தான் பித்ருக்களுக்கு, பிண்டம் தர வேண்டும். இல்லை என்றால் அவர்கள் பசியோடும், தாகத்துடனும் யம தூதர்களுடன் நடக்கும்போது சோர்வு அடைந்து, மயங்கி விழுவார்கள். அந்த சமயத்தில், தங்களுக்கு உரிய மரியாதை தராத தன் வம்சத்தை சபிப்பார்கள்.
> பித்ருக்களின் சாபம்பட்ட குடும்பத்தில்தான் துர் சம்பவங்கள் நடக்கும். தெய்வம் கூட கருனை காட்டாது – உதவி செய்யாது என்கிறது கருட புராணம்...
> மகாளயம் என்பது புரட்டாசி மாதத்தில் செய்யப்படும் ஒரு பொது சிரார்த்தமாகும். சிரார்த்தம் என்பதற்கு சிரத்தையோடு செய்யப்படுவது என்பது பொருள். புரட்டாசி மாதத்து அபரபக்கப் பிரதமை முதலாக, பூர்வ பக்கச் சதுர்த்தி வரையுள்ள காலம் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இறந்த நமது முன்னோர்களுக்கு கர்ம காரியங் களைச் செய்யலாம். இவ்வாறு செய்யப்படும் கிரியையானது, இருபத்தொரு யாகங்களில் ஒன்று என்று கூறப்படு கிறது.
>
> இது பிதுர் தேவதைகளுடைய திருப்தி யின் பொருட்டு செய்யப்படும் பிண்ட கருமம். மரணம் அடைந்தவர்கள் நரகம் எய்துவதை தவிர்த்து, அவர்கள் சுகமாய் இருப்பதைக் குறித்து செய்யப்படும் கிரியை சிறப்பு வாய்ந்ததாகும்.
>
> தெற்கு நோக்கிச் சஞ்சரிக்கும் சூரியனின் தென்பாகத்து நடுப்பாகம், புரட்டாசி மாதத்தில் பூமிக்கு நேராக நிற்கின்றது. அப்போது சந்திரனது (அபரபக்கம்) தென்பாகமும் நேர்க்கோட்டில் நிற்கும். இந்த தருணத்தில் பிதுர் கர்மங்களைச் செய்வது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வபக்கம் என்பது பகல், அபரபக்கம் என்பது இரவு. பூர்வபக்கப் பிரதமை உதயமாகும், இராக்கால முடிவு அமாவாசை, பகற்கால முடிவு பூரணையாகும். இந்த நேரத்தில் பிதுர் கடன்களைச் செய்வது சாலச்சிறந்தது.
>
> சிரார்த்த கர்மங்களுக்குரிய சிறந்த தலங்கள் என சில உள்ளன. அதில் காசி, கயை, பிரயாகை, குருஷேத்திரம், கோகர்ணம், குருஜாங்கலம், புட்கலஷேத்திரம் முதலியவை முக்கியமானவையாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் இந்த சிறப்பை பெற்று விளங்குகிறது. மேற்கண்ட அனைத்துத் தலங்களிலும், கயை தலத்தில் சிரார்த்தம் செய்வது மிகவும் விசேஷமானது.
>
> தேவர்களின் வருடக் கணக்குப்படி, புரட்டாசி மாதம் நடு ராத்திரியாகும். இந்த நேரத்தில் நிசப்தம் நிலவும். எனவே தேவர்களின் ஆராதனைகளுக்கும், பிதுர்களை உபசரிப்பதற்கும் இதுவே சிறந்த காலமாக கருதப்படு கிறது. சாஸ்திரங்கள், நுண் முறைகள் மற்றும் ஆன்றோர்களின் கூற்றும் அதுவேயாகும். எனவே அந்த காலத்தில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்து கர்மங்களை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.
>
> அன்றைய தினத்தில் மேலே கூறப்பட்ட புண்ணியத் தலங் களுக்குச் சென்று நம்முடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். அவ்வாறு செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள கோவில்களின் முன்பாக இருக்கும் நீர் நிலைகளில் வைத்து தர்ப்பணத்தை செய்யலாம். பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் இதுபோன்ற தர்ப்பண நிகழ்வுகள் நடத்தப் படுகின்றன. தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசை அன்று, முன்னோர்களுக்கு பிதுர் காரியங்களைச் செய்து கடமைகளை நிறைவேற்ற ஏராளமானவர்கள் குவிவார்கள். அன்றைய தினம் கடற்கரைப் பகுதியே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி காணப்படும். நம் முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த பிதுர் காரியங்களின் காரணமாக, முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
>
> மகாளய அமாவாசை அன்று, காலையில் எழுந்து வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் குளித்து முடித்து, அருகில் உள்ள கோவில்களில் இருக்கும் நீர்நிலைகளிலோ அல்லது கடற்கரைப் பகுதியிலோ சென்று பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் உபாவசம் இருந்து, முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைத்து இறைவனை வணங்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில், இறை அடியார் களுக்கு நம்மால் இயன்றவரை அன்னதானம் செய்து மகிழ்வித்தல் வேண்டும். இவ்வாறு செய்வதால் முன்னோர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்து அவர்கள் நற்கதி அடைவார்கள். அதன் வாயிலாக அவர்களின் தலைமுறையும் நல்ல நிலையை அடையும்.
>
> A.P.VidyaMani,
> AstroAnalyst & Gemologist
> 9943394405

Thursday, October 08, 2015

சிட்டு குருவிகள் எங்கே போயின

நன்விஜய் பிரசாத்

நேற்று ஒரு பதிவில் Bird feeder இருப்பதை பார்த்து சிட்டு குருவிகள் எங்கே போயின என்று இணையத்தில் படிக்க தொடங்கினேன்.
சிட்டுக்குருவிக்கு மருத்துவ குணங்கள்( சிட்டு குருவி லேகிய மேட்டர்) இருக்கின்றன எனும் தவறான நம்பிக்கைகளால் இவை பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றனவாம்.
* நகரங்களில் கட்டிட அமைப்புகள் மாறி ஜன்னல், தாழ்வாரம், முற்றம் போன்றவை மறைந்து, கண்ணாடி சூழப்பட்ட குளிர்வறைகளாக மாறி வருவதால் மனிதர்களுடனே சேர்ந்து வாழ்ந்த குருவிகளுக்கு இருப்பிடமின்றிப் போய்விட்டதாம்
* சிறு மளிகைக் கடைகள் மறைந்து. பல்பொருள் அங்காடிகளாக மாறுவது அவற்றிற்கு சிந்தும் தாணிய உணவு கிடைக்க வழியில்லாமல் செய்து விடுகிறதாம்,
* மேலும் நகரங்கள், மரம், செடி, கொடி போன்றவைகளை இழந்து கான்க்ரீட் காடுகளாகி வருவது குருவிகள் வாழ்விற்கு ஏற்றதாக இல்லையாம்.
* குளம், குட்டை போன்றவை மறைந்ததால் தண்ணீர்ப் பற்றாக்குறையும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
* ஒலி மாசும் ஒரு பெரிய எதிரியாக சொல்லப்படுகிறது.
* அலைபேசிக் கம்பத்தில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சினாலும் சிட்டுக் குருவிகள் பாதிக்கப்படுகின்றனவாம்.
* கிராமங்களில் விவசாய நிலங்கள் குறைவதால் சிட்டுக் குருவிகளின் முக்கிய உணவான தானியங்கள் கிடைப்பது அரிதாகி இவை அழிகின்றனவாம்.
* பெட்ரோலில் இருந்து வெளியேறும், 'மீத்தைல் நைட்ரேட்' எனும் ரசாயனக் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் அழிகின்றனவாம்.
* இவையெல்லாவற்றையும் விட சிட்டுக் குருவிகள் அழிவிற்கு முக்கிய காரணியாக விளங்குவது நாம் கணக்கின்றிக் கொட்டும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தானாம். DDT என்ற பூச்சிக்கொல்லி மருந்து தானியங்களுக்குத் தெளிப்பதால், அதனை உண்ணும் சிட்டுக் குருவிகள் இறக்க நேரிடுகிறது எனப் பல பறவையியலாளர்கள் சொல்கின்றனர்.
தற்போது இதை உணர்ந்து சிட்டுக் குருவிகள் அழிவை தடுக்க பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் இவற்றிற்கு தானியங்கள், நீர் வைக்க பரிந்துரைக்கப் படுகிறது. இவைகளுக்கு சிறு அட்டைப் பெட்டி, மரத்தாலான வீடுகளும் அமைக்கப்படுகிறது.

சிட்டுக்குருவி பற்றிப் பேசும் போது நேச்சர் பார் எவர் சொசைட்டியின் (Nature Forever Society) நிறுவனர் முகமது திலவார் (Mohamed Dilawar) பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிட்டுக்குருவியினத்தைக் காப்பாற்றத் தம் முழு நேரத்தையும் அர்ப்பணித்திருக்கும் இவர் துவங்கிய 'நம் சிட்டுக்குருவியைக் காப்பாற்றுவோம்,' (SAVE OUR SPARROWS) (SOS) என்ற விழிப்புணர்ச்சி இயக்கம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. புர்ஹானி பவுண்டேஷனுடன் (Burhani Foundation (India) இணைந்து 52000 பறவை உணவளிப்பான்களை உலகமுழுதுக்கும் வழங்கியிருக்கிறார். இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இணைப்பு:- http://www.natureforever.org/
.
ஓசூர் அடுத்த, கும்மாளாபுரம், கொத்தகொண்டப்பள்ளி, முத்ததுார், தளி சுற்று வட்டார பகுதிளில் உள்ள மொத்தம், 236 கிராமங்களில் அட்டை கூடுகள் வைக்க திட்டமிட்டு தற்போது, 80 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், ஆனைக்கல் பகுதியில், 44 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு இதில், 20 கிராமங்களில் அட்டை கூடுகள் வைக்கப்பட்டள்ளது. இந்த முயற்சியால் தற்போது, 10 ஆயிரம் வீடுகளில் சிட்டு குருவிகள் வாழ்வதற்கு வசதியாக அட்டை கூடுகள் வைக்கப்பட்டுள்ளது.
.