11, வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்
12, துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்
13, விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்
14, ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்
15,கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்
றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்
16, விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது
17,நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்
18,சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது
19,தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
20,நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்
இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் படிக்க லிங்க் அனுப்புங்கள். திரட்டிகளிலும் சேர்த்திடுங்கள், மறக்காம . Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். எனது பதிவு உங்கள் Dash Board க்கு வந்து சேரும், உங்களது Email id ஐ வலப்புறம் உள்ள கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து சேரும்
அன்புள்ள நண்பர்களே எல்லோரும் எழுதிய தெளிவுரை இருந்தாலும், ஒவ்வொரு அதிகாரத்திற்கும், எனது டிசைனை சேர்த்தி உள்ளேன் , எனது டிசைன் பற்றி
மறக்காம கருத்து சொல்லுங்க நான் வளர,,,,,,,,
36 comments:
சரியான நேரத்துல போட்டிருக்கீங்க!
ஆனா மழை கொஞ்சம் அதிமாவே
சிறப்பித்துக்கொண்டிருக்கிறது!
வான்சிறப்பை சுட்டும் உங்களது கை வண்ணம் நல்லாருக்கு!
உங்கள் கருத்துக்கு மிக்கநன்றி கோகுல்,,,, இன்று காலையிலிருந்து திருப்பூரில்தான் இருந்தேன் , எனது அம்மா, பெரியாப்பவின் வீட்டில் உள்ளோரெல்லாம் மழை சேதத்திலிருந்து அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளனர், ஆனால் அவர்களின் உடைமைகள் வீடு, போன்ற வற்றை இழந்துள்ளனர், நேரில் பார்த்தபோது கண்களே கலங்கி விட்டது, இப்போதுதான் வந்து சேர்ந்தேன்,
தொடருங்கள்... அருமையான முயற்சி
suryajeeva said...
தொடருங்கள்... அருமையான முயற்சி
நன்றி நண்பரே!!!
நீங்கள் வான் சிறப்பு எழுதிய நேரம் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது!
அருமையான முயற்சி. தொடருங்கள்!
அதே சமயம் உங்கள் உறவுகள் இந்த மழையால் மிகவும் பாதிக்கப்பட்டதை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது!
மனோ சாமிநாதன்
தங்கள் நல மனத்துக்கு என் அநேக நன்றிகள், தொடருங்கள்....
சிறப்பா வான்மழையாய் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ஆஹா... திருவள்ளுவர் கிட்ட இருந்தே காப்பி பேஸ்ட்டா... நல்லா வருவீங்க தம்பி...
வணக்கம் கார்த்தி
அருமையாய் இருக்கின்றது உங்கள் பதிவு வாழ்த்துக்கள்..
நல்ல முயற்சி.
நல்ல முயற்சி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
அருமை நண்பா!முயற்சி தொடர வாழ்த்துக்கள்.த.ம 3
திருக்குறள் அதிகாரத்திற்குப் பொருத்தமான புகைப்படங்கள், நல்ல தொரு முயற்சி தொடருங்கள் கார்த்தி....
வாழ்த்துகள்., திருப்பூர் நேற்றய வெள்ள பாதிப்பு அதிகம்தான்.,
பாராட்டுகள் மழையாக பொழியட்டும்! மழையை திட்டுவோருக்கு நல்லதொரு விளக்கம்,வள்ளுவரின் எழுத்து மூலமாக!
இன்னிக்குத்தான் உங்கபக்கம் வரேன். பதிவு ரொம்ப நல்லா இருக்கு ஃபாலோவராக இணைந்துவிட்டேன்.
அருமை கார்த்தி,தொடர்ந்து எழுதுங்கள்.படித்து பயன் பெறுகிறோம்.
நல்ல முயற்சி... தொடருங்கள் ஸ்பார்க்.
அன்பிற்கினிய நண்பர் ஸ்பார்க் காந்தி அவர்களுக்கு அன்புடன் A.S. முஹம்மது அலி எழுதும் மின் மடல் நலம். நலமறிய ஆவல் நிற்க! இன்று தங்களின் வலைப்பூவை பார்த்தேன். மனித குலம் வாழ நீர் இன்றி அமையாது உலகு என்கிற முது மொழியை நினைவு கூர்ந்து தாங்கள் வழங்கியுள்ள கருத்துக்கள் மிகவும் அருமையாக உள்ளது. தொடரட்டும் இப்பணி. நல்வாழ்த்துக்களுடன் அன்புடன் A.S.முஹம்மது அலி
தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்... நண்பா...
சிறப்பான இடுகைகள் உளம் நிறைந்த பாராட்டுகள்
வாழ்த்துக்கள் நண்பரே!
கோபமும் இல்லை... பாராட்டும் இல்லை... சும்மா நக்கல்ஸ்...
ஸ்பார்க் கார்த்தி மிக நல்ல முயற்சி. தொடரவும் அருமை. மின்னஞ்சல் போடுவதை விடுத்து எனது வலைக்கு வரவும்.உடனே நானும் எமது பெயரை கிளிக் செய்து வரலாம் அல்லவா! வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
என்னை பாராட்டி கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!!!!
நல்ல பதிவு.
மழையா பொழிஞ்சுப்புட்டீக!
வான்மழை பற்றிய
வள்ளுவர் வாக்கினை
தேன்சுவை கிட்ட
தெரிவித்தீர் நன்றி!
த ம ஓ 7
புலவர் சாஇராமாநுசம்
வள்ளுவரின் வான்சிறப்பு அதிகாரத்தை தக்கசமயத்தில் பதிவு செய்துள்ளிர்கள், நல்ல முயற்சி இது தொடர என் வாழ்த்துக்கள் !ஸ்பார்க் கார்த்தி.
தொடருங்கள்... அருமையான முயற்சி...
gud work karthi
தமிழர்கள் மறந்துவிட்ட திருக்குறளை நினைவுபடுத்தும் வகையில் விளக்கங்களுடன் வெளீயிட்டுள்ளீர்கள்.
பாராட்டுகள்.
தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.
Write more pls :-)
தொடருங்கள்... அருமையான முயற்சி.....நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...
www.rishvan.com
Congratz...Tamil Cinema News
தொடரட்டும் உங்கள் தமிழ்பணி!
தொடரட்டும் வாழ்த்துகள்
தாத்தா ஜெயலலிதா இட்லி சாப்பிடலையா!
http://vitrustu.blogspot.in/2013/04/blog-post_4672.html
Post a Comment