Wednesday, November 06, 2019

பிச்சைக்காரர்கள்


 அன்பான நண்பர்களே மும்பையில் இருந்து நண்பர் ஒருவர் அனுப்பி உள்ள செய்தி
"பிச்சைக்காரர்களுக்கு நாம் உணவும் தண்ணீரும் மட்டும் தான் தரவேண்டும்,
பணமாக ஒரு ரூபாய் கூட தரக்கூடாது" என்று மும்பையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகாம்கள் நடத்துகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக
எல்லா சமூகத்தினரும் ஒரு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளவேண்டும்
"இன்றிலிருந்து எந்த பிச்சைக்காரர்களுக்கும்
உணவு தண்ணீர் தவிர பணம் எதுவும் தர மாட்டேன்" என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும்,
இதனால் பிச்சைக்காரர்களை வைத்து தொழில் நடத்தி;
பணம் சம்பாதிப்பதும்,
குழந்தை கடத்தல் போன்ற குற்றச் செயல்களும் குறையும். குழந்தைகளை கடத்தி ஊனப்படுத்தி,
பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதிக்கும் கும்பலை ஒழிக்க இதுவே வழி.
நீங்கள் இதை அங்கீகரிப்பதற்கு அடையாளமாக
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்....!!!







குழந்தையின்மைக்கு மூல காரணம்

மூச்சு காற்று குறைபாடே குழந்தையின்மைக்கு மூல காரணம்
ஒரு இரகசியம் என்ன வென்றால் உடலில் காரத் தன்மையையும், அமிலத் தன்மையையும் தீர்மானிப்பது ஆக்சிஜனே. இந்த இரு தன்மைகளே ஆண் குழந்தையா, பெண் குழழ்தையா என்பதையும் முடிவு செய்கின்றன. பெண்களுக்கு குழந்தை பாக்கியத் தடை ஏற்படும் காரணங்களைப் பற்றி பார்த்தால்,
பாதிக்கட்ட பெண்ணின் பாலுறுப்புகளில் இருந்து தகவல் மூளைக்கு செல்வதில்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உறுப்புகளின் செல்பாட்டிற்கான கட்டளைகள் மூளையில் இருந்து வருவதில்லை.
பெண்ணின் உறுப்புகளில் உள்ள திசுக்களுக்கு தேவையான புரத உற்பத்திக்கான நொதிகள் நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்டரியிலிருந்தும், அட்சினல் சுரப்பியிலிருந்தும், கருவகங்களில் இருந்தும் சுரக்காதது அல்லது அதற்கான கட்டளை மூளையிலிருந்து வராதது.
சரியான உணவுப் பழக்கம் இல்லாதது.
ஆக்சிஜன் பற்றாக் குறை.
பாலின உறுப்புகளில் இருந்து கழிவுகள் நீங்காமல் இருப்பது.
இந்தக் காரணங்களால் கருமுட்டை உற்பத்தி ஆகாமல் போவது, கொழுப்பு திரண்டிருப்பது, கருப்பை மூடியிருப்பது, மாதத் தீட்டு ஏற்படாமல் இருப்பது போன்ற குறைகள் ஏற்படும். இதில் பிராணாயாமம் எப்படி இந்த பிரச்சனையை சீர் செய்யும் என்றால், இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் போது, அதிகப்படியான ஆக்சிஜன் திசுக்களுக்கு கிடைக்கிறது. கார்பன் டை ஆக்சைடு அதிக அளவில் வெளியேறுகிறது. பெண்களின் பாலுறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கும் படிக்கு நரம்புகளின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன (தகவல், கட்டளை ஒருங்கிணைப்பு). திசுக்களின் கடினத் தன்மை போய் மென்மை அடைகிறது. இந்த பிளாஸ்மா பெண்களின் பாலுறுப்புகளுக்கு எளிதாகச் செல்கிறது.
அதிகாலையில் அரசமரம் சுற்றினால் அதீத ஆக்ஸிஜன் கிடைக்கும்....
: நன்றி சித்தர்களின் குரல்










Tuesday, October 29, 2019

குழந்தை சுர்ஜித் RIP

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை காப்பாற்ற முடியவில்லை..

ஒரு குழந்தை வீட்ல இருந்தா அது பத்து பேருக்கு வேலை வைக்கும். அதே குழந்தைக்கு நூறு விதத்தில ஆபத்தும் இருக்கும். அதுக்கு கைக்கு எட்டுகிற இடத்தில் வில்லங்கமான பொருட்களை வைக்கக் கூடாது, தண்ணி தொட்டிகிட்ட போகவிடக்கூடான்னு ஏகப்பட்ட சமாச்சாரம் இருக்கு. அதை அப்புறம் பார்ப்போம்.

இங்கே, ஒரு பக்கம் ஆழ்துளை கிணறு விஞ்ஞானிகள், இன்னொரு புறம் அரசின் நடவடிக்கைகளை புரட்டியெடுக்கும் பயில்வான்கள் கம் மீடியாக்கள். எல்லாவற்றையும்விட நெஞ்சை நக்குவதில் இமயத்திற்கே சவால்விடும் இரக்க உள்ளங்கள்..

இந்த கோஷ்டிகளை பத்தி நாம என்னைக்குமே கவலைப்பட்டதில்லை.. தாலுகா வாரியா, போர் போடறவங்களோட அஸோசியேஷனை கூப்பிட்டு செம கண்டிப்பு காமிச்சாலே போதும்.. அவங்க கிட்ட இல்லாத விவரமா? அதை டிரேஸ் பண்ணி மூடுற வேலைய பார்த்தாலே மேற்கொண்டு எந்த எழவும் வராது.

இதுல பிரச்சினை என்னன்னா,  நம்மில் எத்தனை பேருக்கு, அலட்சியத்தால் பிறர் மரணத்திற்கு  காரணமாக இருத்தல் என்பது பற்றிய சிந்தனை இருக்கிறது என்பதுதான்.

இன்னைக்கும் நம்மை சுற்றி பல இடங்கள் டைம் பாம் தான்.. மூடிபோட்டு மூடப்படாத கழிவுநீர் கால்வாய், கண்டுபிடிக்க முடியாத வேகத்தடைகள், சாலைப் பள்ளங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்..

எல்லாவற்றையும்விட படிச்சிருந்தும் விசாரிச்சோ, இல்லை அலசி ஆராய்ந்தோ இல்லாம எவ்வளவு அலட்சியமா எல்லா கருமாந்திரங்களையும் ஷேர் பண்ணி ஏழரையை வைக்கிறாங்க..

செத்துப்போன சுர்ஜித்துக்கு பதிலா இன்னொருத்தன் வீட்டு குழந்தை படத்தை போட்டு ஆர்ஐபி அலம்பல் பண்ணிகிட்டு இருக்காங்க...
நன்றி ஏழுமலை வெங்கடேசன் 

Tuesday, October 22, 2019

Flex board making




Life lessons


"ஒளிபெறுவதற்காக முயற்சிக்காதீர்கள்; ஒளியாக மாறிவிடுங்கள்; மாற்றமடைவதற்குரிய நிகழ்வு  உங்களுக்கு மிகமிக எளிதுதான்; ஏனெனில், நீங்கள்தான் கணத்திற்க்கணம் மாற்றம் அடைந்துக்கொண்டு இருகிறீர்களே; ஆனாலொன்று, ஒளி எப்போதும் மாற்றமடைவதில்லை; நீங்கள்தான் ஒளிக்கான மாற்றத்தை உங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்"
−−− #ஶ்ரீவித்யாநந்தா