Wednesday, November 06, 2019

பிச்சைக்காரர்கள்


 அன்பான நண்பர்களே மும்பையில் இருந்து நண்பர் ஒருவர் அனுப்பி உள்ள செய்தி
"பிச்சைக்காரர்களுக்கு நாம் உணவும் தண்ணீரும் மட்டும் தான் தரவேண்டும்,
பணமாக ஒரு ரூபாய் கூட தரக்கூடாது" என்று மும்பையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகாம்கள் நடத்துகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக
எல்லா சமூகத்தினரும் ஒரு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளவேண்டும்
"இன்றிலிருந்து எந்த பிச்சைக்காரர்களுக்கும்
உணவு தண்ணீர் தவிர பணம் எதுவும் தர மாட்டேன்" என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும்,
இதனால் பிச்சைக்காரர்களை வைத்து தொழில் நடத்தி;
பணம் சம்பாதிப்பதும்,
குழந்தை கடத்தல் போன்ற குற்றச் செயல்களும் குறையும். குழந்தைகளை கடத்தி ஊனப்படுத்தி,
பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதிக்கும் கும்பலை ஒழிக்க இதுவே வழி.
நீங்கள் இதை அங்கீகரிப்பதற்கு அடையாளமாக
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்....!!!







No comments: