Thursday, December 17, 2015

பகவத்கீதை

சஞ்ஜயன் கூறினான்
மன்னரே, பாண்டுவின் மகன்களால் அணிவகுக்கப்பட்ட படையை மேற்பார்வையிட்ட பிறகு, மன்னன் துரியோதனன் தன் ஆச்சாரியரை அனுகிப் பின்வருமாறு கூறினான்
                 பகவத்கீதை 1:2
ஆச்சாரியரே, துருபத குமாரனான உங்கள் புத்திசாலி சீடனால் நேர்த்தியாக அணிவகுக்கப்பட்ட, பாண்டு புத்திரர்களின் மாபெரும் படையைப்பாருங்கள்
                      பகவத்கீதை 1:3
அந்த சேனையில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமான வில்லாலிகள் பலரும் இருக்கின்றனர்: யுயுதானன், விராடன், துருபதன் போன்ற மாபெரும் வீரர்கள் உள்ளனர்.
                       பகவத்கீதை 1:4
மேலும் திருஷ்டகேது, சேகிதானன், காசிராஜன், புருஜித், குந்திபோஜன், ஷைப்யன் போன்ற சிறந்த பலமிக்க போர்வீரர்கள் பலரும் உள்ளனர்.
                       பகவத்கீதை 1:5
வீரனான யுதாமன்யு, பலமுள்ள உத்தமௌஜன், சுபத்ரையின் புதல்வன் மற்றும் திரௌபதியின் குமாரர்களும் உள்ளனர். இப்படை வீரர்கள் அனைவரும் மாபெரும் ரத வீரர்கள்
                  பகவத்கீதை 1:6
ஆனால், பிராமணரில் சிறந்தவரே, தாங்கள் தெரிந்துகொள்வதற்காக எனது சேனையை வழிநடத்தும் தகுதிவாய்ந்த நாயகர்களைப் பற்றியும் தங்களிடம் கூறுகிறேன்.
                       பகவத்கீதை 1:7
மரியாதைக்குரிய தாங்கள், பீஷ்மர், கர்ணன், கிருபாச்சாரியார்,அஷ்வத்தாமன், விகர்ணன் மற்றும் சோமதத்தனின் குமாரனான பூரிஷ்வரன் முதலியோர், போரில் எப்போதும் வெற்றி காண்பவர்களே
                  பகவத்கீதை 1:8
எனக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய எண்ணற்ற மாவீரர்கள் பலரும் உள்ளனர். யுத்தத்தில் வல்லுநர்களான அவர்கள் அனைவரும் பலவிதமான ஆயுதங்களுடன் தயாராக உள்ளனர்
                பகவத்கீதை 1:9
பாட்டனார் பீஷ்மரால் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட நமது பலம் அளக்கமுடியாதது. ஆனால் பீமனால் கவனமாக பாதுகாக்கப்பட்ட பாண்டவ சேனையோ அளவிடக்கூடியதே
                      பகவத்கீதை 1:10

No comments: