Thursday, January 07, 2016

சாபங்கள்

சாபங்கள் பல்வகை...காண்போமா!!
இந்த கேள்விக்கு பதில் பலருக்கும்
புரியாத புதிராகவே உள்ளது. எல்லோரும் நினைத்த நேரத்தில் கண்ட கண்ட காரணங்களுக்காக நியாயமே இல்லாமல் கொடுக்கும் சாபங்கள் எல்லாம் பலிக்காது,
நியாயமான காரணங்களுக்காக மனம் நொந்து சபித்தால் மட்டுமே சாபங்கள் பலிக்கும்.
இப்படி மனிதனுக்கு வாழ்வில் வரும் சாபங்கள் மற்ற மனிதர்கள் கொடுக்கும் சாபம் மட்டுமல்ல, இவையன்றி பல வகைகளிலும் சாபங்கள் உண்டாகின்றன, அப்படிப்பட்ட சாபங்கள் பல வகைப்படும்.
அவை பெண் சாபம், பிரேத சாபம், பித்ருசாபம், சர்ப்பசாபம், கோசாபம், பூசாபம் (பூமி சாபம்), கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம், முனி சாபம், பிரம்ம சாபம் மற்றும் குல தெய்வ சாபம்.
1.பெண் சாபம் :
------------------------
பெண்களை ஏமாற்றுதல், சகோதரிகளை, தாயை ஆதரிக்காமல் கைவிடுவது, மனைவியை கைவிடுவது ஏமாற்றுவது மனம் நோகும்படி செய்வது இந்த காரணங்களால் பெண் சாபம் உண்டாகிறது.
இதன் விளைவாக வம்சம் நாசமாகும்.
2.பிரேத சாபம் :
------------------------
இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாக பேசுவது, பிணத்தை தாண்டுவது, இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பது, இறந்தவரின் உடலை உறவினர்கள் பார்க்கவிடாமல் தடுப்பது, சாவு நடந்த வீட்டில் இருந்து 98 அடி வரை தீட்டு உண்டு அந்த எல்லைக்குள் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் உடலை அடக்கம் செய்யும் முன்பு உணவு உண்பது, தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வது போன்ற காரணங்களால் பிரேத சாபம் உண்டாகிறது.
இதன் விளைவாக வியாதிகள், அவமானங்கள், கடன்கள், அற்ப ஆயுள், ஆயுள் குறைவு உண்டாகிறது.
3.பிரம்ம சாபம் :
---------------------------
வித்தை கற்று தந்த குருவை மறப்பது, நிந்திப்பது, தவறாக பேசுவது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, கற்ற வித்தையை பிறருக்கு சொல்லிக்கொடுக்காமல் மறைப்பது போன்ற காரணங்களால் பிரம்ம சாபம் உண்டாகிறது.
இதன் விளைவாக வித்யா நட்டம் என்னும் கல்வியில் குறைபாடு உண்டாகிறது.
4. சர்ப்ப சாபம் :
------------------------
பாம்புகளை தேவையின்றி கொல்வது, அவற்றின் இருப்பிடங்களை தேவையின்றி அழிப்பது போன்ற காரணங்களால் சர்ப்ப சாபம் உண்டாகிறது.
இதன் விளைவாக திருமண தடை, செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் முதலியன உண்டாகிறது.
5. பித்ரு சாபம் :
-----------------------
தாய் - தந்தை, தாத்தா - பாட்டி ஆகியோர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்யாமல் இறுதி காலத்தில் அவர்களை தவிக்கவிடுவது, உதாசீனப்படுத்துவது, ஒதுக்கிவைப்பது, அவர்கள் இறந்த பின்பு செய்ய வேண்டிய திதி பரிகாரங்களை செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால் பித்ரு சாபம் உண்டாகிறது.
இதன் விளைவாக ஆண்வாரிசுகள் இல்லாமல் போகும், பலரிஷ்ட்ட தோஷத்தால் குழந்தைகள் இறக்கும்.
6. கோ சாபம் :
---------------------
பசுவை வதைப்பது, பால் வற்றிய பசுவை இறைசிக்காக வெட்ட கொடுப்பது, கன்றையும் - பசுவையும் பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்க மறுப்பது, பசுவுக்கு போதிய உணவளிக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் உண்டாகிறது.
இதன் விளைவாக வாழ்வில் வளர்சிகள் இல்லாமல் தொட்டதெல்லாம் தோல்வியில் முடியும்.
7. பூ (பூமி) சாபம் :
----------------------------
ஆத்திரத்தால் பூமியை சதா காலால் உதைப்பது, பூமியை பாழ்படுத்துவது, பூமியை சீர் கேடாக்கும் பொருட்களை பூமியில் புதைப்பது, தேவையற்ற பள்ளங்களை உண்டாக்குவது, பிறரின் பூமியை அபகரிப்பது போன்ற காரணங்களால் பூ ( பூமி ) சாபம் உண்டாகிறது.
இதன் விளைவாக வாழ்வில் நரக வேதனை அடைய நேரிடும்.
8. கங்கா சாபம் :
--------------------------
பலர் அருந்தக்கூடிய நீரை பாழாக்குவது, நீரை தேவைக்கு அதிகம் வீணாக்குவது, ஓடும் நதியை அசுத்தம் செய்வது போன்ற காரணங்களால் கங்கா சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக உடலில் நீர் சம்பந்தமான நோய்கள் உண்டாகி வாட்டும், நம் தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் போகும்.
9. விருட்ச சாபம் :
------------------------------
பசும் மரத்தை வெட்டுவது, கனி கொடுக்கும் மரத்தை பட்டுப் போக செய்வது, மரங்களை எரிப்பது, மரங்கள் சூழ்ந்த இடங்களை கட்டிடங்கள் கட்ட அழிப்பது, வனங்களை அழிப்பது போன்ற காரணங்களால் விருட்ச சாபம் உண்டாகிறது.
இதன் விளைவாக வாழ்வில் தீரா கடன்கள், நோய்கள், வாகன விபத்துக்கள் உண்டாகி வாட்டும்.
10. தேவ சாபம் :
--------------------------
முன்னோர்கள் பூஜித்து வந்த தெய்வங்களின் பூஜையை செய்யாமல் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்ந்து பேசுவது, தெய்வ காரியங்களுக்கு உதவாமல் ஏளனம் செய்வது போன்ற காரணங்களால் தேவ சாபம் உண்டாகிறது.
11.ரிஷி சாபம் :
------------------------
உண்மையான ஆசார்ய புருஷர்களை, பக்தர்களை, ஆன்மிக வாதிகளை மதிக்காமல் அவமதிப்பது போன்ற காரணங்களால் ரிஷி சாபம் உண்டாகிறது.

No comments: