Wednesday, October 15, 2014

ராகு







மனிதத் தலை  நாக உடருடன் இருக்கும் ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச் சிறப்பும் சுவை நிறம்பியது.  விப்ரசித்தி என்ற மன்ன்ன் ஒருவனுக்கும்சிம்மிகை என்ற அசுரகுலப் பென்னொருத்திக்கும் மகனாகப் பிறந்தவர் ராகு. தேவர்களும், அசுர்ர்களும்பாற்கடலைக் கடையும் போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப்  பெற்று உண்டுவிட்டான்.
உண்மை அறிந்த மகாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலைவேறு உடல்வேறாகி விழுந்தான். ஆயினும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப் பகுதியில் உயிர் இருந்த்து . ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்ட , இறைவன் பாம்பின் உடலை அவருக்குக் கொடுத்து அவரை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.
ராகு பகவானுக்கு வெள்ளிக் கிழமையில் அபிஷேகம் செய்வித்து, நீல வஸ்திரம் ,கோமேதக மணி, நீலமந்தாரை ஆகியவற்றால் அலங்காரம் செய்து ராகு மந்திரங்களை ஓதி , அருகம்புல்லால் யாகத் தீயை எழுப்பி, உளுந்து தானியம், உளுத்தம்பருப்புப் பொடி அன்னம் ஆகியவற்றால் ஆகுதி செய்து , அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து பிராத்தனை செய்தால் ராகுகிரக தோஷம் நீங்கும்.
அரவெனும் ராகு அய்யனே போற்றி !
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி !
ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி !
ராகுக்கனியே ரம்மியா போற்றி  !

2 comments:

ப.கந்தசாமி said...

ராகு, கேது இருவரின் கதையும் பின்னிப் பிணைந்ததாயிற்றே. ஏன் பாதிக்கதையை மட்டும் சொல்லியிருக்கிறீர்கள்?

Karthikeyan Rajendran said...

ஐயா. தொடர்ந்து சொல்கிறேன்