Monday, March 07, 2016

இம்மையிலும் நன்மை... மறுமையிலும் நன்மை!

வி.ராம்ஜி(MyTemple team - SS12)
   மிகவும் எளிமையானது இந்த விரதம். சிவராத்திரியன்று காலையில் நீராடி சுத்தமான ஆடை அணிந்து சிவாலயத்திற்கு சென்று  'சிவ சிவ' என்று சொல்லிக் கொண்டே இருங்கள். 'நமசிவாய' என்று சிவநாமம் சொல்லுங்கள்.
   வழிபட்டு வீட்டிற்கு வந்து நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருக்க வேண்டும். இன்று முழுவதும் திட ஆகாரத்தைத்
தவிருங்கள். உடல் நிலை சரியில்லாதவர்கள், வயதானவர்கள் பழம் சாப்பிடலாம். மாலையில் சிவாலயத்திற்கு  சென்று, பழம், பால், அபிஷேகத் திரவியங்களை இயன்ற அளவு சிவனாருக்கு வழங்குங்கள்.
இரவு நடைபெறும் நான்கு கால பூஜையில் கலந்துகொள்ளுங்கள்.
அர்த்தஜாம பூஜை முடிந்ததும் வீட்டிற்கு வந்து நீராடி அதிகாலை மீண்டும் கோயிலுக்கு சென்றுவழிபட வேண்டும்.  பின்னர் உணவருந்தி விரதத்தை முடிக்க வேண்டும். அன்று அமாவாசை தினம் வருமாதாலால் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டியவர்கள் தர்ப்பணம் செய்து முடித்து பிறகே உணவருந்த வேண்டும்.
   இந்த எளிய விரதத்தை தொடர்ந்து கடைபிடிப்போருக்கு வாழும் காலத்தில் செல்வ வளமும் பிறப்பற்ற நிலையும் கிடைக்கும் என்பது உறுதி என்கிறார் காஞ்சிபுரம் ஸ்ரீகயிலாசநாதர் கோயிலின் ஸ்தானீகர் ராஜப்பா குருக்கள்.
MyTemple - Daily stories and updates on Whatsapp! Save our number 7022638881 as MyTemple and send "Hi" on Whatsapp for a free subscription in தமிழ். www.mytempleapp.com

No comments: