Tuesday, February 07, 2017

அழுகிய தேங்காய் அபசகுனமா?

அழுகிய தேங்காய் அபசகுனமா?
  எப்பொழுதும் வீட்டில் நல்ல காரியங்கள் செய்யும் போது பயன்படுத்தும் முக்கியப் பொருள் தேங்காய். ஒரு கண், இரண்டு கண், மூன்று கண் என தேங்காய் மூன்று கண்களை கொண்டுள்ளது. அதில் தேங்காயின் முதல் கண் பிரம்மனாகவும், இரண்டாவது கண் லஷ்மியாகவும், மூன்றாவது கண் சிவனாகவும் போற்றப்படுகிறது.
👉 கடவுளுக்கு நம்முடைய உள்ளத்தின் சுத்தத்தைக் காண்பிக்க தேங்காயில் சில சகுனங்கள் உண்டு.
👉 தேங்காய் உடைக்கும் பொழுது அழுகி இருந்தால் தேவையில்லாத பயம், குழப்பம், கலக்கம், ஏமாற்றம் அடைந்ததாக எண்ணிக்கொள்வார்கள்.
👉 ஒரு சிலர் நடக்கக்கூடாதது நடந்துவிட்டதை போல தானும் பயந்து மற்றவர்களையும் பயமுறுத்துவார்கள்.
ஆனால் அழுகிய தேங்காய் ஆனந்தத்தின் அறிகுறி...!
👉 அழுகிய அனைத்து தேங்காயும் காரிய சித்தி ஆகுவதற்கான அறிகுறியாகும். ஒரு துணியை எடுத்து நீரில் நனைத்து அழுக்கை துடைத்து பிழிந்தால் அழுக்கு நீர் தான் வரும் அதே போல தான் உங்கள் பீடை, துர்சகுனங்கள், கண்திருஷ்டி ஆகியவை அனைத்தும் பிரார்த்தனை செய்து உடைக்கும் தேங்காயில் விலகியதன் அறிகுறியை காட்டுகிறது.
👉 முழு கொப்பரையாக இருந்தால் சுபகாரியம், புத்திர பாக்யம் உண்டாகும், பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
👉 அடுத்து, தேங்காயில் பு+ இருந்தால் எதிர்பாராத வரவு மற்றும் லாபம் ஏற்படும்.
நீங்கள் உங்களையோ அல்லது கடவுளையோ மட்டும் முழுமையாக நம்பினால் போதும் மற்றவை அனைத்தும் நல்லபடியாக நடக்கும்....!

No comments: