Wednesday, February 08, 2017

தினம் ஒரு திருத்தலம் - சுவேதாரண்யேஸ்வரர் கோவில், திருவெண்காடு!...

சுவேதாரண்யேஸ்வரர் கோவில் திருவெண்காடு
🌀 திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது. இங்கு தவம் செய்த இந்திரனின் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் பெயரில் இருந்தே இத்தலத்தின் பெயர் இவ்வாறு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது தென்னிந்தியாவின் ஒன்பது நவக்கிரக கோவில்களுள் ஒன்றாகும். இவை 1000 - 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை ஆகும்.
அதிசயங்கள் :
🌿 மூர்த்திகள் - சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தி
🌿 சக்திகள் - பிரம்ம வித்யாநாயகி, காளிதேவி, துர்க்கை
🌿 தீர்த்தங்கள் - சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம்
🌿 தலவிருட்சங்கள் - வடவால், வில்வம், கொன்றை.
தல வரலாறு :
🌠 முன்னொரு காலத்தில் மருத்துவன் என்ற அசுரன் தனக்கு இறைவன் அருள் கிடைக்க வேண்டும் என்று நினைத்தான். அதற்காக பல்வேறு ரிஷிகளின் ஆலோசனையை ஏற்று சிவனை வேண்டி நடுக்கடலில் நெடுங்காலமாக பெரும் தவம் இருந்தான்.
🌠 அவனது தவத்தை மெச்சிய சிவபெருமான் மருத்துவன் முன்பு தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
🌠 அச்சமயத்தில் அசுரன், சிவனிடம் உள்ள சூலாயுதத்தை கேட்டான். அந்த சூலாயுதத்தை எடுத்து சிவபெருமான் அவனுக்கு வழங்கினார். அதனை பெற்ற மருத்துவாசுரன் நல்ல காரியங்களை செய்யாமல், உலகத்தில் உள்ள தேவர்களை துன்புறுத்தினான். அவனால் துன்புறுத்தப்பட்டவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.
🌠 உடனே சிவபெருமான் தனது வாகனமான நந்தியை அவனிடம் அனுப்பினார். நந்திபகவான் மருத்துவாசுரனிடம் சென்று அறிவுரைகளை கூறினார். அதனை ஏற்காத மருத்துவாசுரன் நந்தியை போருக்கு அழைத்தான்.
🌠 அப்போது ஏற்பட்ட சண்டையில் மருத்துவாசுரன் நந்தியை தாக்கி, அதன் கொம்பை முறித்தான். மேலும், நந்தியின் உடலில் 9 இடங்களில் காயத்தை ஏற்படுத்தினான். திருவெண்காடு ஆலயத்தில் உள்ள நந்தியின் உடலில் காயங்களையும், கொம்பு முறிக்கப்பட்டு இருப்பதையும் தற்போதும் காணலாம்.
தலச் சிறப்பு :
🌠 இக்கோவில் காசிக்கு இணையான திருத்தலமாக கருத்தப்படுகிறது. இத்தலம் காவிரிக் கரையில் அமைந்துள்ளது.
🌠 திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும்.
🌠 சிவபெருமானின் 64 வடிவங்களில் 43வது வடிவம் அகோரமூர்த்தி. திருவெண்காட்டில் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது.
🌠 புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப்படும் தலம்.
🌠 சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின் போது அவரது முக்கண்களிலிருந்தும் சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன.
🌠 மூலவர் உட்புறச் சுவரில் தலப்பதிக கல்வெட்டுகள் உள்ளன.
பிரார்த்தனை :
👉 இங்கு குழந்தைகள் கல்வியில் மேன்மையடைய பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
👉 குழந்தை பேறு கிடைக்கவும், திருமணத்தடை நீங்கவும் இங்கு மக்கள் பிரார்த்திக்கின்றனர்

No comments: